திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 11 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
11திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --அண்டக்குலத்தில் ஆஹூதராய் -நெய்யிடை -என்கிற பாட்டில் சங்கதரான-ஐஸ்வர்யார்த்திகள் பாசுரத்தாலே திருப்பல்லாண்டு பாடுகிறார் – 11
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன் நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
பதவுரை Show / Hide
அல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில்
ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய்
அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான
கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு
கோன், Kon - தலைவராய்
அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள
செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல
திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே !
நானும், Naanum - அடியேனும்
உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு
பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன்
நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில்
நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும்
பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி
பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே !
உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன்