Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 11 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
11திருப்பல்லாண்டு || 11
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே
அல்வழக்கு, Alvazhakku - தவறான வழக்குகளில்
ஒன்றும் இல்லா, Ondrum Illa - சிறிதும் இல்லாதவராய்
அணி, Ani - (ஸம்ஸாரத்துக்கு) ஆபரணமான
கோட்டியர், Kottiyar - திருக்கோட்டியூரிலுள்ளவர்களுக்கு
கோன், Kon - தலைவராய்
அபிமான துங்கன், Abimaana Thungan - நான் எம்பெருமானுக்கு அடியேன் என்னும் அபிமானத்தில் உயர்ந்தவராயுள்ள
செல்வனைப்போல், Selvanai Pol - செல்வநம்பியைப்போல
திருமாலே, Thirumale - லஷ்மீநாதனே !
நானும், Naanum - அடியேனும்
உனக்கு, Unakku - ஸ்வாமியான உனக்கு
பழ அடியேன், Pazha Adiyen - பழமையான அடிமையாயிருக்கிறேன்
நல் வகையால், Nal Vagaiyaal - அழகிய வகையில்
நமோ நாராயணா என்று, Namo Narayana Endru - திருமந்திரத்தை அனுஸந்தித்து
நாமம் பல, Naamam Pala - உன்னுடைய பல திருநாமங்களையும்
பரவி, Paravi - க்ரமமில்லாமல் சொல்லி
பல்வகையாலும் பவித்திரனே, Palvakaiyaalum Pavithirane - (ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலிய) எல்லாவற்றாலும் பாபத்தைப் போக்குபவனே !
உன்னைப் பல்லாண்டு கூறுவன், Unnaip Pallandu Kooruvan - உனக்கு மங்களாசாஸனம் செய்வேன்