திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1100 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1100பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருதலைக் காமமாய் போகாமே இவன் வந்து கிடக்கிறது நமக்காக என்று தாங்களும் நினைக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் – அவர்கள் ஆளாத போது வேறு சிலருக்கு சேஷ பூதர் அல்லோம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
ஏனத்தி னுருவாகி நிலமங்கை யெழில்கொண்டான், வானத்தி லவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற, ஞானத்தி னொளியுருவை நினைவாரென் நாயகரே. –2-6-3
பதவுரை Show / Hide
ஏனத்தின் உரு ஆகி, Eanathin Uru Aagi - வராஹரூபியாய்த் திருவவதரித்து
நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியை
எழில், Ezil - (முன்னிருந்த அழகு சிறிதும் குறையாமல்) அவ்வழகுடனே
கொண்டான், Kondaan - (அண்டபித்தியில் நின்றும்) மீட்டுக்கொணர்ந்தவனும்,
வானத்திலவர், Vaanaththilavar - தேவர்கள்
மகிழ்ந்து, Magizhndhu - ஆநந்தத்துடனே
முறையால், Murayal - தங்கள் தங்கள் அதிகாரத்திற்குத் தகுதியாக
ஏத்தி, Aethi - துதிக்க
வலம் கொள்ள, Valam Kolla - பிரதக்ஷிணம் செய்வதற்குப் பாங்காக,
கானத்தின் கடல்மல்லை தலசயனத்து உறைகின்ற, Kaanaththin Kadalmallai Thalasayanaththu Uraikindra - காட்டினிடையேயிருக்கிற திருக்கடல்மல்லையிலெழுந்தருளியிருப்பவனும்,
ஞானத்தின் ஒளி உருவை, Gnanaththin Oli Uruvai - ஞானலொளிபொருந்திய திருமேனியையுடையவனுமான பெருமானை
நினைவார், Ninaivaar - சிந்திக்கும் பாகவதர்கள்
என் நாயகர், En Naayakar - அடியேனுக்குத் தலைவராவர்.