திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1101 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் பிரதி பஷ நிரசன சமர்த்தனாய் இருக்கச் செய்தே ஆநு கூல்யத்தாலே கார்யம் கொள்வானாக நினைத்து வந்து கிடக்கிறபடியை அனுசந்தித்து ஈடுபடுமவர்கள் என் ஒருவன் அளவன்றிக்கே என் குலத்துக்காக நாதர் ஆவார்கள் என்கிறார்- இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார் நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் –என்னும் அளவல்ல எங்களது-என்கிறார் நான்காம் பாசுரத்தில்) 4 | விண்டாரை வென்றாவி விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா ரவரெங்கள் குலதெய்வமே. –2-6-4 | பதவுரை Show / Hideவிண்டாரை, Vindaarai - சத்துருக்களை ராவணாதி ராக்ஷஸர்களை (- (கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை-;)) வென்று, Vendru - தோற்கடித்து ஆவி விலங்கு உண்ண, Aavi Vilangu Unna - (அவர்களுடைய) உயிரை (நாய் நரி முதலிய) மிருகங்கள் மேல்விழுந்து முடிக்கும் படியாகவும், மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம், Mel Iyalar Kondadum Mal Akalam - மாதர்கள் கொண்டாடப் பெற்றதும் மிடுக்கையுடையதுமான (அவர்களது) மார்வை அழல் ஏற, Azhala Eera - அக்நி ஆக்ரமித்து புஜிக்கும் படியாகவும் வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலே கண்டாரை, Kandaarai - பார்த்துக்கொண்டிருந்த கொண்டாடும் நெஞ்சுஉடையாரவர், Kondadum Nenjuudaiyaaravar - புகழ்ந்து பேசும்படியான நெஞ்சுபடைத்த பாகவதர்கள் எங்கள் குலம் தெய்வம், Engal Kulam Deivam - எங்கள் குலத்துக்குத் தெய்வங்களாவர். |