திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1106 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1106பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே வந்து சாய்ந்து அருளின நீர்மையை அனுசந்தித்து தொழும் நெஞ்சு உடையாரை – அவர்கள் தொழும் விஷயத்தை தேடி இராதே-நெஞ்சே உனக்குத் தொழுகைக்கு விஷயம் அவர்கள் தாங்கள் கிடாய்- என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
பிணங்களிடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனோடு, இணங்குதிருச் சக்கரத்தெம் பெருமானார்க் கிடம்,விசும்பில் கணங்களியங் கும்மல்லைக் கடன்மல்லைத் தலசயனம், வணங்குமனத் தாரவரை வணங்கென்றன் மடநெஞ்சே. –2-6-9
பதவுரை Show / Hide
பிணங்கள் அடு காடு அதனுள், Pinangal Adu Kaadu Adhanul - பிணங்களைச் சுடுகிற சுடுகாட்டிலே (- (என்தன் மட நெஞ்சே! வணங்கு-.))
நடம் ஆடு, Nadam Aadu - நடமாடுகின்ற
பிஞ்ஞகனோடு, Pinjjanonodu - ருத்ரனோடுகூட
இணங்கு, Inangu - பொருந்தி யிருக்கிற
திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம், Thiru Chakkarathu Emperumanarkku Idam - சக்ரபாணியான பெருமானுக்கு இடமானதும்
விசும்பில் கணங்கள், Visumbil Kanangal - தேவ ஸமூஹங்கள்
இயங்கும், Iyankum - வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான
கடல் மல்லை தலசயனம், Kadal Mallai Thalasayanam - திருக்கடல் மல்லையை
வணங்கும் மனத்தாரவரை, Vanangum Manaththaravarai - வணங்குதற்குரிய சிந்தை படைத்த பாகவதர்களை