திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1107 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1107பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி – இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து, அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான், வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார், முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. –2-6-10
பதவுரை Show / Hide
கடி கமழும் நெடுமறுகின், Kadi Kamazhum Nedumarugin - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய
கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற
அடிகள், Adigal - எம்பெருமானுடைய
அடியேநினையும், Adiyeninaiyum - திருவடிகளையே தியானிக்கின்ற
அடியவர்கள் தம், Adiyavarkal Tham - பாகவதர்கட்கு
அடியான், Adiyan - தாஸபூதரும்.
வடிகொள் நெடு வேல் வலவன், Vadikol Neduveel Valavan - கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில்  வல்லவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய
ஒலி, Oli - இவ்வருளிச்செயலை
வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள்,
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார், Mudi Kol Nedumannar Tham Muthalvar Muthal Avar - கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள்.