திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1107 | பெரிய திருமொழி || (2-6–நண்ணாத) (திருகடல்மல்லை 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி – இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –முடியை உடையராய் நாட்டுக்கு அநந்ய பிரதானராய் இருந்துள்ள ஷத்ரியருக்கு பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய் நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன் கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே. –2-6-10 | பதவுரை Show / Hideகடி கமழும் நெடுமறுகின், Kadi Kamazhum Nedumarugin - பரிமளம் வீசுகின்ற நீண்ட வீதிகளையுடைய கடல்மல்லை தலசயனத்து, Kadalmallai Thalasayanaththu - திருக்கடல்மல்லையி லெழுந்தருளியிருக்கிற அடிகள், Adigal - எம்பெருமானுடைய அடியேநினையும், Adiyeninaiyum - திருவடிகளையே தியானிக்கின்ற அடியவர்கள் தம், Adiyavarkal Tham - பாகவதர்கட்கு அடியான், Adiyan - தாஸபூதரும். வடிகொள் நெடு வேல் வலவன், Vadikol Neduveel Valavan - கூர்மை பொருந்திய பெரிய வேலைக்கொண்டு பொருவதில் வல்லவருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வாருடைய ஒலி, Oli - இவ்வருளிச்செயலை வல்லார், Vallaar - ஓதவல்லவர்கள், முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் முதல் ஆவார், Mudi Kol Nedumannar Tham Muthalvar Muthal Avar - கிரீடமணிந்த ராஜாதி ராஜர்களுக்கும் தலைவராகப் பெறுபவர்கள். |