திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1109 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1109பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பின்னானார் வணங்கும் -என்கிறபடியே சொல்லு என்று கிரியை உண்ணவும் பொறாதே-பட்டினி இடவும் பொறாதே –இருக்கும் ஸூ குமாரரைப் போலே அதிகமான சம்ச்லேஷம் விச்லேஷம் பொறுக்க மாட்டாத படியான ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் உடைய மார்த்த்வம் இருக்கும் படி -என்று – இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக ஸ்ரீ திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள், குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள், வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள், இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-2
பதவுரை Show / Hide
மால் இனம் மொழியாள், Maal Inam Mozhiyal - தன்னுடைய வியாமோஹத்துக்குத் தகுதியான பேச்சையுடையளான இப்பெண்பிள்ளையானவள், (- (இடவெந்தை எந்தை பிரானே!- ;))
துளம்படு முறுவல், Thulampadu Muruvai - மாதுளம் விரைபோன்ற பற்களினின்றும் உண்டாகின்ற புன்சிரிப்பை
தோழியர்க்கு, Thozhiyarkku - தன் தோழிமார்களை நோக்கி
அருளாள், Arulal - அருள்கின்றாளில்லை;
துணை முலை, Thunai Mulai - சேர்த்தியழகுடைய முலைகளை
சாந்து கொண்டு, Santhu Kondo - சந்தனத்தாலே
அணியாள், Aniyal - அலங்கரிக்கின்றாளில்லை
குளம் படு குவளை கண் இணை, Kulam Padu Kuvalai Kan Inai - தடாகத்திலுள்ள (செவ்வி மாறாத) குவளை மலர் போன்ற கண்களில்
எழுதாள், Ezuthal - மையிட்டுக்கொள்கிறாளில்லை;
குழற்கு, Kuzharku - கூந்தலில்
கோலம் நல் மலர் அணியாள், Kolam Nal Malar Aniayal - அழகிய சிறந்த புஷ்பங்களைச் சூட்டிக் கொள்ளுகிறாளில்லை
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும், Valam Padu Munnir Vaiyam Mun Alandha Maal Ennum - (ரத்னம் முதலிய) நற்சரக்குகளுக்கிடமான கடலால் சூழப்பட்ட பூமியை முன்னொருகால் அளந்த மால் ஸர்வேச்வரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
இளம் படி இவளுக்கு என் நினைந்திருந்தாய், Ilam Padi Ivalukku En Ninaindhirundhai - (விரஹம் பொறாத) ஸுகுமாரஸ்வபாவையான இவள் விஷயத்திலே என்ன செய்வதாகத் திருவுள்ளம்?