திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1117 | பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக ஸ்ரீ திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று – இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –பிராரப்த கர்மாக்களை வாசனையோடு போக்கப் பெறுவார்கள் தாம் மோஹிப்பது உணர்வதாக திருத் தாயார் கூப்பிடுவதாக வேண்டாதபடி பகவத் அனுபவமே யாத்ரையான தேசத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவார்கள் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆயஎம் மாயனே !அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! –2-7-10 | பதவுரை Show / Hideஅன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய, Annamum Meenum Aamaiyum Ariyum Aaya - “ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த எம் மாயனே, Em Maayaney - எம்பெருமானே! அருளாய் என்னும், Arulai Ennum - “கிருபை பண்ணவேணும்”. என்று பிரார்த்திக்கின்ற இன் தொண்டர்க்கு, In Thondarkku - பரமபக்தர்களுக்கு இன் அருள் புரியும், In Arul Puriyum - பரம க்ருபையைச் செய்தருள்கின்ற. இடவெந்தை எந்தைபிரானை, Idaventhai Endhaipiraanai - திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக, மன்னு மா மாடம் மங்கையர்தலைவன், Mannu Maa Maadam Mangaiyarthalaivan - சாச்வதமான பெரிய மாடங்களையுடைய திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் மானம் வேல், Maanam Vel - சிறந்த வேலாயுதத்தையுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் வாய் ஒலிகள் பன்னிய, Vaai Oligal Panniya - விஸ்தரித்த அருளிச்செய்த பனுவல், Panoval - இப்பாசுரங்களை பாடுவார், Paaduvaar - பாடுமவர்கள் நாளும், Naalum - எந்நாளும் பழ வினை பற்று அறுப்பார், Pazha Vinai Patru Aruppaar - கல்மஷ ஸம்பந்தமற்றிருப்பர்கள். |