திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1118 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் – ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப,
முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க,
எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா,
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-1 | பதவுரை Show / Hideதிரிபுரம் மூன்று எரித்தானும், Thiripuram Moondru Erithaanum - எங்குந் திரிந்துகொண்டு உலகங்கட்குத் துன்பம் விளைத்துக் கொண்டிருந்த மூன்று பட்டணங்களைக் கொளுத்தியொழித் தவனான சிவபிரானும் (- (அதற்கு அவர்)) மலர் மிசை மேல் அயனும், Malar Misai Mael Ayanum - தாமரை மலரிற் பிறந்து மேன்மை பொருந்திய பிரமனும் வியப்ப, Viyappa - ஆச்சரியப்படவும், மூ உலகும், Moo Ulagum - மூன்று லோகங்களிலுமுள்ளவர்கள் முரி திரைமா கடல் போல் முழங்கி, Muri Thiraimaa Kadal Pool Muzhangi - அலையெறிகின்ற பெரிய கடல் போலே (ஸ்தோத்ர) கோஷங்களைச் செய்து கொண்டு முறையால், Murayal - முறைதவறாது வணங்க, Vananga - வணங்கவும், இரணியன் ஆகம் இரண்டு கூறு ஆ, Iraniyan Aagam Irandu Koordu Aa - இரணியாசுரனுடைய உடல் இரண்டு பிளவாம்படியாக எரி அன கேசரம், Eri An Kesaram - நெருப்புப்போன்ற உளைமயிர்களோடும் வாள் எயிற்றோடு, Vaal Eiyitroadu - வாள்போன்ற கோரப்பற்களோடும் கூடி அரி உரு ஆம் இவர், Ari Uru Aam Ivar - நரசிங்கவுருக்கொண்ட பெருமானைப் போன்றுள்ள இப்பெரியவர் ஆர் கொல் என்ன, Aar Kol Enna - யார்? என்று நான் சொல்ல, அட்டபுய கரத்தேன் என்றார், Attapuy Karatthen Endraar - ‘அட்டபுயகரக்ஷேத்ரத்திலுள்ளவன்; நான்’ என்று மறுமொழி கூறினார். |