திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1119 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது – சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது – இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில்) 2 | வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-2 | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - தேவர்கள் (- (மாவலி நீர் வார்த்து தத்தம் பண்ணினவாறே) (அட்புயகரத்தேன் என்றார்-.)) வேதம் உரைத்து, Vedham Uraithu - வேத வாக்கியங்களைச் சொல்லி வணங்கும், Vanangum - வணங்க நின்ற வெம் திறல் வீர்ரில் வீரர் ஒப்பார் இவர், Vem Thiral Veeril Veerar Oppaar Ivar - மிக்க வலிவுகொண்ட வீரர்களிலுங் காட்டில் மஹாவீரரான இராமபிரானைப் போன்றுள்ள இப்பெரியவர் செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல், Sem Tamil Paaduvaar Thaam Vanangum Thevarkol - அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ? தெரிக்க மாட்டேன், Therikka Maatten - அறிகின்றிலேன்; மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியின் யாகபூமியிலே குறள் உரு ஆய் வந்து, Kural Uru Aay Vandhu - வாமநவுருக் கொண்டுவந்து நிமிர்ந்து, Nimirndhu - திரிவிக்கிரமனாக வளர்ந்து மண் அளந்த, Man Alandha - பூமியை அளந்துகொண்ட அந்தணர் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Andhanar Ponda Ivar Aar Kol Enna - பிரமசாரியைப் போலுமிரா நின்ற இப்பெரியவர் ஆர்? என்ன, |