திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1121 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-4 | பதவுரை Show / Hideமஞ்சு உயர், Manju Uyar - மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும் (- (ஆர் கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்-.)) மா மணி குன்றம், Maa Mani Kuntram - சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை ஏந்தி, Aendi - (குடையாக) எடுத்துப் பிடித்து மா மழைகாத்து, Maa Mazhaikathu - பெருமழையைத் தடுத்தவராயும், அன்று, Andru - கம்ஸ னரண்மனையினுட் புகும்போது ஒரு மாயம் ஆனை அஞ்ச, Oru Maayam Aana Anja - ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான (கம்ஸனுடைய) யானையானது நடுங்கும்படியாக அதன் மருப்பு, Adhan Maruppu - அவ் யானையின் கொம்பை வாங்கும், Vaangum - பறித்தெறிந்தவராயுமுள்ள ஆயர்கொல், Aayarkol - கோபாலகிருக்ஷ்ணரோ? இவர் மாயம் அறிய மாட்டேன், Maayam Ariya Maatten - (இன்னாரென்று நிச்சயிக்க முடியாத இந்த) ஆச்சரியத்தை அறிகிறேனில்லை; வெம் சுடர் ஆழியும், Vem Sudar Azhiyum - தீக்ஷ்ணமான சோதியையுடைய சக்கரத்தையும் சங்கும், Sangum - சங்கையும் ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு முன், Mun - கண்ணெதிரே வேதம் ஓதுவர், Vedham Othuvaar - வேதங்களை ஓதிக்கொண்டிருப்பவராய் நீதி வானத்து அம்சுடர் போன்ற இவர், Neethi Vaanaththu Amsudar Ponda Ivar - முறை தவறாத பரமபதத்திலேயுள்ள பரஞ்சோதி போன்றவரான இவர் |