திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1122 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-5 | பதவுரை Show / Hideகலைகளும், Kalaigalum - (வேதத்தின் உபநிஷத் பாகமான) வேதாந்தங்களையும் (- (இவர் ஆர்கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.)) வேதமும், Vedhamum - (கர்மகாண்டமான) வேதங்களையும் நீதி நூலும், Neethi Noolum - இதிஹாஸங்களையும் கற்பமும், Karppamum - கல்பஸூத்ரங்களையும் சொல், Sol - வியாகரண சாஸ்த்ரத்தையும் பொருள் தானும், Porul Thaanum - மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும் நிலைகளும், Nilaigalum - அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும் வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும் பிறர்க்கும், Pirarkkum - மற்றுமுள்ள மனிசர்க்கும் நீர்மையினால், Neermayinal - கிருபையினால் அருள் செய்து, Arul Seythu - அளித்தவரும் நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும தங்குகின்ற அலை கடல் போன்ற, Ninda Malaihalum Ma Maniyum Malarmel Mankaiyum Sangamum Thangukinra Alai Katal Ponra - பெரிய மலைகளும் சிறந்த கௌஸ்துபமணியும் பிராட்டியும் சங்கும் எப்போதும் நிலைத்திருக் கப்பெற்ற அலையெறிகின்ற கடல் போன்றவருமான |