திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1122 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1122பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற, அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-5
பதவுரை Show / Hide
கலைகளும், Kalaigalum - (வேதத்தின் உபநிஷத் பாகமான) வேதாந்தங்களையும் (- (இவர் ஆர்கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
வேதமும், Vedhamum - (கர்மகாண்டமான) வேதங்களையும்
நீதி நூலும், Neethi Noolum - இதிஹாஸங்களையும்
கற்பமும், Karppamum - கல்பஸூத்ரங்களையும்
சொல், Sol - வியாகரண சாஸ்த்ரத்தையும்
பொருள் தானும், Porul Thaanum - மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும்
நிலைகளும், Nilaigalum - அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
பிறர்க்கும், Pirarkkum - மற்றுமுள்ள மனிசர்க்கும்
நீர்மையினால், Neermayinal - கிருபையினால்
அருள் செய்து, Arul Seythu - அளித்தவரும்
­­­­­­நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும தங்குகின்ற அலை கடல் போன்ற, Ninda Malaihalum Ma Maniyum Malarmel Mankaiyum Sangamum Thangukinra Alai Katal Ponra - பெரிய மலைகளும் சிறந்த கௌஸ்துபமணியும் பிராட்டியும் சங்கும்  எப்போதும் நிலைத்திருக் கப்பெற்ற அலையெறிகின்ற கடல் போன்றவருமான