திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1126 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன் அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன் ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்) 9 | தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-9 | பதவுரை Show / Hideதஞ்சம், Thanjam - நிச்சயமாக (- (ஆயினும் தாமே) (அட்டபுயகரத்தேன் என்றார்–.)) என் வளையும், En Valaiyum - எனது கைவளைகளும் இவர்க்கு நில்லா, Ivarkku Nillaa - இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை; சிந்தித்தேற்கு, Sindhitheerkku - நான் ஆராயுமளவில் நெஞ்சமும், Nenjamum - எனது மனமும் தம்மதே, Thammathe - இவருடையதேயாம்; வஞ்சி மருங்குல், Vanjji Marungul - வஞ்சிக்கொடிபோன்ற(எனது) இடையானது நெருங்க, Nerunga - துவளும்படியாக நோக்கி, Nookki - கடாக்ஷித்து வாய் திறந்து, Vaai Thirandhu - தனது திருப்பவளத்;தைத் திறந்து ஒன்று பணித்தது உண்டு, Onru Paniththathu Undu - ஒருவார்த்தை சொன்னது முண்டு; இவர் நோக்கும் நோக்கம், Ivar Nookkum Nokkama - இவர் பார்க்கிற பார்வையானது நஞ்சம் உடைத்து, Nanjam Udaiththu - விஷங்கலந்ததுபோலே கொடிதாயிருக்கின்று; நான் இவர் தம்மை அறிய மாட்டேன், Naan Ivar Thammai Ariya Maatten - நான் இவருடைய படியை அறிகின்றிலேன்; இவர் ஆர் கொல் என்ன, Ivar Aar Kol Enna - இவரார் என்று கேட்கவும் அஞ்சுவன், Anjuvan - பயப்படுகின்றேன்; |