திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1127 | பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10 | மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. –2-8-10 | பதவுரை Show / Hideதொண்டையர்கோன், Thondaiyarkon - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான மன்னவன், Mannavan - அரசனாலே வணங்கும், Vanangum - வணங்கப்பட்ட நீள்முடி மாலை, Neelmuti Maalai - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும், வயிரமேகன் தன் வலி, Vayiramegan Than Vali - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த புகழ் சூழ்ந்த கச்சி, Pugazh Soozhntha Katchi - காஞ்சிபுரியிலே அட்டபுயகரத்து, Attapuyakarathu - திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள ஆதிதன்னை, Aadhithannai - முதல்வனான எம்பெருமானைக்குறித்து கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maamathil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும் காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான கலிகன்றி, Kalikanri - கலியன் குன்றா இன் இசையால் சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு ஏத்த வல்லார்க்கு, Aetha Vallarukku - (எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு இடம் வைகுந்தம், Idam Vaikundham - இருப்பிடம் வைகுண்டமாகும். |