திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1127 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1127பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன், தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை, கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. –2-8-10
பதவுரை Show / Hide
தொண்டையர்கோன், Thondaiyarkon - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான
மன்னவன், Mannavan - அரசனாலே
வணங்கும், Vanangum - வணங்கப்பட்ட
நீள்முடி மாலை, Neelmuti Maalai - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும்,
வயிரமேகன் தன் வலி, Vayiramegan Than Vali - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த
புகழ் சூழ்ந்த கச்சி, Pugazh Soozhntha Katchi - காஞ்சிபுரியிலே
அட்டபுயகரத்து, Attapuyakarathu - திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள
ஆதிதன்னை, Aadhithannai - முதல்வனான எம்பெருமானைக்குறித்து
கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maamathil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றா இன் இசையால்  சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு
ஏத்த வல்லார்க்கு, Aetha Vallarukku - (எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு
இடம் வைகுந்தம், Idam Vaikundham - இருப்பிடம் வைகுண்டமாகும்.