திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1129 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ராவண வதம் பண்ணினதோடு-இவன் சத்ரு வதம் பண்ணினதோடு வாசி அற்று இருக்கிறது ஆயிற்று இவருடைய ஆதரம்- தான் இல்லை யானாலும் தன்னுடைய வீர ஸ்ரீ நிற்கும்படி வாழ்ந்த பல்லவன் -என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2 | கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுடரும் நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனையில் செரு வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-2 | பதவுரை Show / Hideகார்மன்னு நீள் விசும்பும், Karmannu Neel Vichumbum - மேகங்கள் பொருந்திய பெரிய ஆகாசமென்ன (- (ஆகிய இவையெல்லாம்) (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) கடலும், Kadalum - ஸமுத்திரங்களென்ன சுடரும், Sudarum - சந்திரன் சூரியன் முதலிய சுடர்ப்பொருள்களென்ன நிலனும், Nilanum - பூமியென்ன மலையும், Malaiyum - குலபர்வதங்களென்ன தன் உந்தி தார்மன்னு, Than Undhi Tharmannu - தனது திருநாபிக் கமலத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரிகாக்ஷனுக்கு இடம், Idam - இருப்பிடமாவது தடம் மா மதிள் சூழ்ந்து, Thadam Maa Mathil Soozhndhu - தடாகங்களாலும் பெரிய மதிள்களாலும் சூழப்பட்டு அழகாக கச்சி, Azhagaga Kachchi - அழகான காஞ்சீபுரியிலே, முனையில், Munaivil - போர்க்களத்திலே தேர்மன்னு தென்னவனை, Thermannu Thennavanai - மஹாரதனான பாண்டிய ராஜனுடைய செரு வில் திறல் வாட்டிய, Seru Vil Thiral Vaattiya - சண்டை செய்யும் வில்லின் வலியைப் பங்கப்படுத்தின திண் சிலையோன், Thin Silaiyon - வலிய வில்லையுடையனாய் பார்மன்னு, Paarmannu - இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த பல்லவர்கோன், Pallavarkon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |