திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1130 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மதிக்கும் படியான ஆண் பிள்ளைத்தனம் இறே அவரதும் – கட மா களி யானை வல்லான் -என்றும் ஆடல் மா வலவன் -என்றும் மருவலர் தம்முடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும் துறை தோறும் தலையாய் இருக்கிற ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் இறே மதிக்கிறார் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனிடம் மணிமா டங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-3 | பதவுரை Show / Hideமுனம் ஒருகால், Munaam Orukaal - முன்பொருகால் (- (பரமேச்சுர விண்ணகரம் அதுவே-.)) மா உரு ஆய், Maa Uru Aay - விலக்ஷணமான வடிவுடையனாய் கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே உரம் தரு மெல் அணை, Uram Tharu Mel Anai - வலிமிக்க மிருதுவான சேஷசயனத்திலே பள்ளி கொண்டான், Palli Kondaaan - திருக்கண்வளர்ந்தவனும் வரம் தரும், Varam Tharum - வரதனென்று திருநாமமுடையவனும் மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிபோன்ற நிறத்தனுமான பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, மணி மாடங்கள் சூழ்ந்து, Mani Maatangal Soozhndu - ரத்நமயமான மாடங்களாலே சூழப்பட்டு அழகு பொலிந்த அழகாய கச்சி, Azhagaaya Katchi - கச்சிப்பதியிலே, முனநாள், Munanaal - முற்காலத்தில், மண்ணையில் நிரந்தவர், Mannaivil Niranthavar - மண்ணையென்னும் நகரத்திலுள்ள சத்ரு ராஜாக்களானவாகள் புண் நுகரி வேல் நெடு, Pun Nukhari Veel Nedu - மாம்ஸங்களைக் கவர்கின்ற வேலாயுதத்தின் கொடிய வாயிலே வாயில் உக, Vaayil Uga - பட்டு முடியும்படியாக செருவில், Seruvil - போர்க்களத்திலே பரந்தவன், Parandhavan - வியாபித்தவனான பல்லவர்கோன் பணிந்த, Pallavarkon Panintha - பல்லவராஜன் பணிவிடை செய்யப்பெற்ற |