திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1131 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களின் உடைய செறிந்த குழாமானது சிதறி ஓட-முனிந்து சீறி முன்பு ஒருகால் கையிலே வில் வளைத்தவன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4 | அண்டமு மெண்டிசை யும்நிலனும் அலைநீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுடனே விரைந் தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-4 | பதவுரை Show / Hideஅண்டமும், Andamum - அண்டங்களையும் (- (ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய உச்சி-.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) எண் திசையும், En Thisayum - எட்டுத்திசைகளையும் நிலனும், Nilanum - பூமியையும் அலை நீரொடு, Alai Neerodu - கடல்களையும் வான், Vaan - ஆகாசத்தையும் எரி, Eri - அக்நியையும் கால், Kaal - காற்றையும் முதலா, Muthala - இவை முதலான மற்றும் பல பொருள்களையும் உண்டவன், Undavan - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கின எந்தைபிரானது, Endhaipiraanathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இடமாவது, பண்டு ஒருகால், Pandhu Orukaal - முன்னொரு காலத்தில் செருவில், Seruvil - போர்க்களத்திலே விரைந்தார், Viraindhaar - சண்டை செய்ய விரைந்து வந்தவர்களான விண்டவர், Vintavar - பகைவர்கள் இண்டை, Intai - நெருங்கின (தங்களது) குழாமுடனே, Kuzhamudane - கூட்டங்களோடே இரிய, Iriya - சிதறியோடும்படி முனிந்து, Muninthu - சீறி வளைத்தான், Valaiththan - வில்லைவளைத்தவனான பல்லவராஜன் பணிந்த, Panintha - கைங்கரியம் செய்யப்பெற்ற |