திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1132 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாக லோகத்தை வென்று சர்ப்பத்தை த்வஜமாக எடுத்தானாக சொல்லக் கடவது – பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | தூம்புடைத் திண்கைவன் தாள்களிற்றின் துயர் தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப் பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-5 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்னொரு காலத்தில் (- (தடம் சூழ்ந்து அழகாய கச்சி.) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) தாம்பு உடை திண்கை வன் தாள், Thambu Udai Thin Kai Van Thaal - துளையையுடைய துதிக்கையையும் வலியுள்ள காலையுமுடைய களிற்றின், Kalittrin - கஜேந்திராழ்வானது துயர், Thuyar - துன்பத்தை தீர்த்து, Theerthu - போக்கினவனாயும், பும் புனல் பொய்கை, Pum Punal Poigai - அழகிய நீரையுடைய பொய்கையிலே அரவம், Aravam - காளிய நாகம் வெருவ, Veruva - அஞ்சும்படியாக புக்கான் அவனுக்கு, Pukkan Avanukku - பாய்ந்தவனாயுமிருக்கிற எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, தேம் பொழில் குன்று எயில் தென்னவனை, Them Pozhil Kunru Eyl Thennavanai - தேன் நிறைந்த சோலைகளையும் மலைபோன்ற மதிள்களையுடைய பாண்டிய நாட்டின் அரசன் திசைப்ப, Thisaippa - அறிவு கலங்கும்படி அன்று, Andru - முன்பு செரு மேல், Seru Mel - போர்க்களத்திலே வியந்து சென்ற, Viyandhu Senra - விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும் பாம்பு உடை, Paambu Udai - நாகத்தைக் கொடியாகவுடையவனுமான பல்லவர் கோன், Pallavar Kon - பல்லவராஜன் பணிந்த, Panintha - கிஞ்சித்கரிக்கப்பெற்ற |