திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1135 | பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் – அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-8 | பதவுரை Show / Hideஒரு கால், Oru Kaal - முன்னொரு காலத்தில், (- (அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–;) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.)) குடை திறல் மன்னவன் ஆய், Kudai Thiral Mannavan Aayi - வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து) குரங்கை, Kurangai - வாநர வீரர்களை படையா, Padaiya - ஸேனையாகக்கொண்டு மலையால், Malaiyaal - மலைகளினால் கடலை, Kadalai - தெற்கு ஸமுத்ரத்தை அடைத்தவன், Adaiththavan - அணைகட்டி யடைத்தவனான எந்தை பிரானது, Endai Piraanathu - எம்பெருமானுக்கு இடம், Idam - இருப்பிடமாவது, நென் மெலியில், Nen Meliyil - நென்மெலி யென்னும் நகரத்தில் விடை திறல், Vidai Thiral - காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான வில்லவன், Villavan - வில்லவனென்கிற அரசன் வெருவ, Veruva - அஞ்சி நடுங்கும்படி செரு வேல், Seru Vel - யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை வலம் கை பிடித்த, Valam Kai Piditha - வலக்கையிலே பிடித்தவனும் படை திறல், Padai Thiral - ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான |