திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1135 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1135பெரிய திருமொழி || (2-9–சொல்லுவன்) (பரமேஸ்வர விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சக்கரவர்த்தி திருமகனாய் பூசல் என்றால் அஞ்சக் கடவ குரங்குகளைப் படையாகக் கொண்டு நீரிலே ஆழக் கடவ மலையாலே கடலை அடைத்தான் – எனக்கு ஜனகனாய் உபகாரனானவனுக்கு இடம் – அழகிய மாடங்களாலே சூழப் பட்ட அழகிய பரமேச்சுர விண்ணகரம் அதுவே என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி, விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த, படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே. –2-9-8
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - முன்னொரு காலத்தில், (- (அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–;) (பல்லவர் கோன்–;) (பணிந்த–;) (பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.))
குடை திறல் மன்னவன் ஆய், Kudai Thiral Mannavan Aayi - வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து)
குரங்கை, Kurangai - வாநர வீரர்களை
படையா, Padaiya - ஸேனையாகக்கொண்டு
மலையால், Malaiyaal - மலைகளினால்
கடலை, Kadalai - தெற்கு ஸமுத்ரத்தை
அடைத்தவன், Adaiththavan - அணைகட்டி யடைத்தவனான
எந்தை பிரானது, Endai Piraanathu - எம்பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடமாவது,
நென் மெலியில், Nen Meliyil - நென்மெலி யென்னும் நகரத்தில்
விடை திறல், Vidai Thiral - காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான
வில்லவன், Villavan - வில்லவனென்கிற அரசன்
வெருவ, Veruva - அஞ்சி நடுங்கும்படி
செரு வேல், Seru Vel - யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை
வலம் கை பிடித்த, Valam Kai Piditha - வலக்கையிலே பிடித்தவனும்
படை திறல், Padai Thiral - ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான