திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1142 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்- ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் – சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,
மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-5 | பதவுரை Show / Hideகறை வளர், Karai Valar - (ரத்த மாம்ஸங்களின்) கறை ஏறிக்கிடக்கிற (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.)) வேல், Vel - வேற்படையையுடைய கரன் முதலா, Karan Muthala - கரன் முதலாக கவந்தன் வாலி, Kavandan Vaali - கபந்தவனும் வாலியும் கணை ஒன்றினால் மடிய, Kanai Ondrinhaal Madiya - ஓர்அம்பாலே முடியும்படி (செய்தவனும்) இலங்கை தன்னுள், Ilankai Thannul - லங்காபுரியிலே பிறை எயிறு வாள் அரக்கரி, Pirai Eiyiru Vaal Arakkari - பிறைபோன்ற கோரப்பற்களையும் வாள்களையுமுடைய சேனை எல்லாம், Sennai Ellam - அரக்கரிகளின் சேனைகளையெல்லாம் பெரு தகையோடு உடன், Peru Thagaiyodu Udan - அவர்களது தலைவனான இராவணனோடு கூடவே துணித்த, Thuniththa - தொலைத்தொழித்த பெம்மான் தன்னை, Pemmaan Thannai - பெருமானை, மாடம் தோறும், Maadam Thoram - ஒவ்வொரு வீடுகளிலும் மறை வளர, Marai Valara - வேதகோஷம் ஓங்கவும் புகழ் வளர, Pugazh Valara - (அதனால்) கீர்த்திவளரவும் ஒண் தொளி, On Tholi - அழகிய வீதிகளிலேயுள்ள மண்டபம் அனைத்தும், Mandapam Anaithum - மண்டபங்களிலெல்லாம் வாரம் ஓத, Vaaram Oda - ‘ வாரமோதுகை’ என்கிற அத்யயநத்தை நடத்தவும் பெற்றதாய் சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும், Sirai Anaindha Pozhil Anaindha Thendral Veesum - நீரரண் நெருங்கின சோலைகளோடு உறைந்து வருகின்ற தென்றல் வீசப்பெற்றதான |