திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1142 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1142பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணனோடு கூட அழியச் செய்த ஸ்வாமி தன்னை-உடையவன் இறே ஷேத்ரத்தில் களை பிடுங்குவார்- ராவண வத அனந்தரத்தில் அத்யயன அனுயாகங்கள் மாறாதாப் போலே யாயிற்று அவன் பட்ட பின்பு ஸ்ரீ திருக் கோவலூரும் – சோலையிலே புக்கு அணைந்த தென்றலானது அந்நீர் நிலத்திலே திவலைகளையும் சோலையில் பரிமளத்தையும் கொண்டு வந்து இவ்வோ இடங்களில் அத்யயனம் பண்ணுபவர்கள் உடைய ஸ்ரமம் ஆறும்படி சிசிரோ உபசாரம் பண்ணும் ஆயிற்று என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள், பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம் பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை, மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும் மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத, சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-5
பதவுரை Show / Hide
கறை வளர், Karai Valar - (ரத்த மாம்ஸங்களின்) கறை ஏறிக்கிடக்கிற (- (திருக்கோவலூரதனுள்–;) (நான் கண்டேன்–.))
வேல், Vel - வேற்படையையுடைய
கரன் முதலா, Karan Muthala - கரன் முதலாக
கவந்தன் வாலி, Kavandan Vaali - கபந்தவனும் வாலியும்
கணை ஒன்றினால் மடிய, Kanai Ondrinhaal Madiya - ஓர்அம்பாலே முடியும்படி (செய்தவனும்)
இலங்கை தன்னுள், Ilankai Thannul - லங்காபுரியிலே
பிறை எயிறு வாள் அரக்கரி, Pirai Eiyiru Vaal Arakkari - பிறைபோன்ற கோரப்பற்களையும் வாள்களையுமுடைய
சேனை எல்லாம், Sennai Ellam - அரக்கரிகளின் சேனைகளையெல்லாம்
பெரு தகையோடு உடன், Peru Thagaiyodu Udan - அவர்களது தலைவனான இராவணனோடு கூடவே
துணித்த, Thuniththa - தொலைத்தொழித்த
பெம்மான் தன்னை, Pemmaan Thannai - பெருமானை,
மாடம் தோறும், Maadam Thoram - ஒவ்வொரு வீடுகளிலும்
மறை வளர, Marai Valara - வேதகோஷம் ஓங்கவும்
புகழ் வளர, Pugazh Valara - (அதனால்) கீர்த்திவளரவும்
ஒண் தொளி, On Tholi - அழகிய வீதிகளிலேயுள்ள
மண்டபம் அனைத்தும், Mandapam Anaithum - மண்டபங்களிலெல்லாம்
வாரம் ஓத, Vaaram Oda - ‘ வாரமோதுகை’ என்கிற அத்யயநத்தை நடத்தவும் பெற்றதாய்
சிறை அணைந்த பொழில் அணைந்த  தென்றல் வீசும், Sirai Anaindha Pozhil Anaindha Thendral Veesum - நீரரண் நெருங்கின சோலைகளோடு உறைந்து வருகின்ற தென்றல் வீசப்பெற்றதான