திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1145 | பெரிய திருமொழி || (2-10–மஞ்சாடு) (திருக்கோவலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவனைத் தோழன் ஆகவும் மைத்துனன் ஆகவும்-தூதனாகவும் சாரதியாகவும் உடைய அர்ஜுனன் உடைய தேர்- ரதியான் ஆகில் வெற்றி தன் தலையிலே கிடக்குமே-அதுக்காக தான் சாரதியாய் வெற்றியும் அவன் தலையிலே கிடக்கும்படி பண்ணினான் ஆயிற்று-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8 | பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,
போரேறொன் றுடையானு மளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே. –2-10-8 | பதவுரை Show / Hideபார்ஏறு பெரு பாரம் தீர, Paar Eru Peru Paaram Theera - பூமியின் மேலேறிக் கிடந்த பாரங்கள் தொலைவதற்காக (- (திருக்கோவலூரதனுள், நான் கண்டேன்–.)) பண்டு, Pandhu - முற்காலத்தில் பாரதத்து தூது இயங்கி, Bharathaththu Thoodhu Iyangi - பாரத யுத்தம் ஸமீபித்தபோது தாதுசென்றவனும் பார்த்தன், Paarththan - அர்ஜுநனுடைய செல்வம் தேர்ஏறு சாரதி ஆய், Selvam Ther Eru Saarathi Aayi - அழகிய தேரையேறி நடத்தின பாகனாகி எதிர்ந்தார்சேனை, Edhirndhaar Senai - எதிரிகளின் சேனையை செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்திலே திறல் அழிய, Thiral Azhiya - வலிமாளும்படி செய்து செற்றான் தன்னை, Settran Thannai - ஒழித்தவனுமான பெருமானை போர்ஏறு ஒன்று உடையானும், Por Aeru Ondru Udaiyanum - (செருக்காலே) கரைபொருகிற ஒரு எருதை வாஹநமாக வுடைய சிவனும் அனகை கோனும், Anakai Konum - குபேரனும் புரந்தரனும், Purandharanum - தேவேந்திரனும் நான்முகனும், Nanmuganum - பிரமனும் பொருந்தும், Porundum - நித்யவாஸம் செய்யப்பெற்ற ஊர்போல், Oorpol - வானுலகத்துஸ்தானங்களைப் போன்று சீர்ஏறு மறையாளர் நிறைந்த செல்வம், Seer Aeru Maraiyalar Niraintha Selvam - சிறந்த வைதிகரிகள் நிறைந்திருக்கையாகிய செல்வம் பொருந்திய |