திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1148 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1148பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷட்பத நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில் தேனைக் குறைவற உண்டு ஆசையாலே ஸ்ரீ நித்யசூரி பரிஷத் கதனான வாசுதேவ தருவின் பாதமலரில் தேனை புஜிக்க கோலி சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்) 1
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல் அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே –3-1-1
பதவுரை Show / Hide
இரு தண் மா நிலம், Iru Than Maa Nilam - மிகக் குளிர்ந்த பெரிய பூமியை
ஏனம் அது ஆய்வளை மருப்பு அகத்தினில் ஒடுக்கி, Enam Athu Aayvalai Maruppu Agathinil Odudki - வராஹ ரூபியாய் வளைந்த கோரப் பற்களினிடத்தே அடக்கினவனாயும்,
கரு தண் மா கடல் கண்  துயின்றவன், Karun Than Maa Kadal Kan Thuyinravan - கறுத்துக் குளிர்ந்து பெருத்த கடலில் யோக நித்திரை  செய்தருள்பவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
இடம், Idam - வாழுமிடம் (எதுவென்றால்)
அம் பொழிலூடே, Am Pozhilude - அழகிய சோலைகளினுள்ளே
நல் கமலம் மலர்தேறல் அருந்தி, Nal Kamalam Malartheeral Arundhi - நல்ல தாமரைப்பூவின் தேனைக் குடித்து
இன் இசை முரன்று எழும், In Isai Murandru Ezhum - இனிய ராகங்களைப் பாடிக்கொண்டு கூத்தாடா நிற்கிற
அணி குலம் பொதுனி, Ani Kulam Podhuni - வண்டுகளின் கூட்டங்கள் நெருங்கி
செருந்தி நாள் மலர்சென்று அணைந்து உழிதரு, Serundhi Naal Malarsendru Anaindhu Uzitharu - சுரபுண்ணை மரத்தினுடைய அப்போதலர்ந்த பூவிலே போய்ச் சேர்ந்து ஸஞ்சரிக்கப்பெற்ற
திரு அயிந்திரபுரம், Thiru Ayindhirapuram - திருவஹீந்த்ரபுரமாம்.