திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1150 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு-அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-ஸ்ரீ தெய்வ நாயகனிடம்- ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் – அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே) 3 | வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே –3-1-3 | பதவுரை Show / Hideவையம் ஏழும் உண்டு, Vaiyam Ezhum Undu - (பிரளய காலத்தில்) (- (திருஅயிந்திபுரம்-.)) ஆவிலை வைகிய மாயவன், Aavilai Vaikiyamaayavan - ஆலந்தளரிலே போதுபோக்கின ஆச்சர்யபூதனும், அடியவர்க்கு மெய்யன் ஆகிய, Adiyavarkku Meyyan Aagiya - தன்னை யடிபணந்தவர்கட்கு உண்மையாக வேலை ஸாதிக்குமவனுமான தெய்வநாயகன் இடம், Deivanaayakan Idam - தெய்வநாயகப் பெருமானுக்கு உறைவிடம்: மெய் தருவரை சாரல், Mei Tharuvarai Saaral - அப்பெருமானுடைய திரு மேனியோடொத்த நிறத்ததான மலையின் அருகில் மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய, Moykol Maadhavi Senbagam Muyangiya - நெருங்கிய குறுக்கத்திச் செடிகளோடும் செய்பக மரங்களோடும் தழுவிய முல்லை அம்கொடி ஆட, Mullai Amkodi Aada - அழகிய முல்லைக்கொடிகள் அசையாநிற்கப் பெற்றதும் செய்ய தாமரை செழு பணை திகழ்தரு, Seyya Thaamarai Sezhu Panai Thigaztharu - செந்தாமரைபூக்கள் செழத்து வளர்கின்ற வயல்கள் விளங்கப் பெற்றதுமான |