திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1154 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய–தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம்) 7 | மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே –3-1-7 | பதவுரை Show / Hideமின்னின் நுண் இடை மடம், Minnin Nun Idai Madham - மின்போல் ஸூக்ஷ்மமான இடையையுடையவளும் மடமைக் குணம் வாய்ந்தவளும் (- (தண் திரு அயிந்திபுரம்-.)) கொடி காரணம், Kodi Kaaranam - கொடி போன்றவளுமான பிராட்டிக்காக, விலங்கலின் மிசை இலங்கை மன்னன், Vilangalin Misai Ilangai Mannan - ஸூவேல மலையின் மீது அமைக்கப் பட்டிருந்த (ஸூரக்ஷிதமான) லங்கா புரிக்கு அரசனான இராவணனுடைய நீள்முடி பொடி செய்த மைந்தனது இடம், Neelmutti Podi Seitha Maindhanathu Idam - பெரிய முடிகள் பத்தையும் பொடி படுத்தின மிடுக்கையுடைய பெருமானுக்கு இடமாவது; மணி வரை நீழல், Mani Varai Neezhal - அழகிய மலையின் நிழலிலே அன்னம் மா அரவிந்தம் மலர்அமளியில் பெடை யொடும் இனிது அமர, Annam Maa Aravindham Malararamalil Pedai Yodum Inidhu Amara - ஹம்ஸங்களானவை பெரிய தாமரைப் பூவாகிய படுக்கையில் தங்கள் பேடைகளுடனே இனிதாகப் பொருந்தி வாழ்வதற்குப் பாங்காக செந்நெல் ஆர்குலை கவரி வீசு, Sennel Aarkulai Kavari Veesu - செந்நெல் நிறைந்த குலை சாமரம் வீசப்பெற்ற |