திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1156 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது – உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று – தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று – ஸ்லாக்கியமான தேரிலே கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற என் குல நாதன் உடைய ஸ்ரீ ஸ்தானம் – ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று – தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி ஸ்ரீ கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய் அந்தர்பவித்து நிற்குமா போலே தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று சொல்லலாம்படி யாயிற்று இருப்பது) 9 | வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –3-1-9 | பதவுரை Show / Hideகைத்தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினில், Kaithalathu Vel Kol Arasar Vem Porinil - கையிலே வேலாயுதத்தை யுடையவராக (துரியோதனன் முதலிய) அரசர்களையுடைய கடூரமான பாரத யுத்தத்தில் (- (திரு அயிந்திரபுரமே-.)) விசயனுக்கு ஆய், Visayanukku Aayi - அர்ஜூனனுக்குத் துணையாகி மணி தேர்தலத்து கோல் கொள் எந்தைபெம்மான் இடம், Mani Therthalathu Kol Kol Endhaipemman Idam - (அவனுடைய) அழகிய தேரிலே கையில் கோல்பிடித்து நின்ற எம்பெருமானுக்கு இடமாவது: குலவு தண் வரை சாரல், Kulavu Than Varai Charal - கொண்டாடத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் கால் கண் கொள் கொடி கையெழ, Kaal Kan Kol Kodi Kaiyezha - வெற்றிலைக் கால்கள் கணுக்கள் தோறும் கிளைக்கின்ற (வெற்றிலைக்) கொடிகள் மிகுதியாக வளரப் பெற்றதும் கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல், Kamuku Ilam Paalaigal Kamazh Charal - பாக்கு மரங்களின் இளங்குருத்துகள் வாஸனை வீசப்பெற்ற சுற்றுப் பிரதேசங்களையுடையதும் சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு, Selgal Paaytharu Sezhu Nathi Vayal Pugu - மீன்கள் துள்ளி விளையாடுகிற அழகிய ஆறானது கழனிகளிலே பெருகப் பெற்றதுமான |