திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1157 | பெரிய திருமொழி || (3-1–இருந்தண்) (திருவயிந்திரபுரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ நியந்தாவாய் ஆயிற்று –ஆபத் சகனும் ஆயிற்று-தேவானாம் தனவாநாஞ்ச-என்கிறபடியே தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும் ஒத்து இருக்கையாலே தம்தாமுடைய அபேஷித சித்திக்காக தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிகலாம் படி திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி அத்தாலே பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை எல்லாம் இல்லை இறே பரமபதத்தில் இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த ஏற்றம் உண்டு இறே இங்கு- பாடிட-பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில் அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம்) 10 | மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே –3-1-10 | பதவுரை Show / Hideமூவர் ஆகிய ஒருவனை, Moovar Aagiya Oruvanai - தானொருவனே மும்மூர்த்தியாக உருவெடுத்து முத்தொழில் நிகழ்த்துமவனாய மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை., Moovulagu Undu Umizhndhu Alandhanai - (பிரளயகாலத்தில்) மூன்று லோகங்களையும் உட்கொண்டு (பிறகு) வெளிப்படுத்தி (மற்றொருகால் திரிவிக்கிரமனாகி) அளந்தவனாய் தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச, Thevar Thanavar Senru Senru Irainja - தேவரும் தானவரும் வந்து வந்து வணங்கலாம்படி தண்திரு அயிந்திராபுரத்து மேவு சோதியை, Thanthiru Ayindhirapurathu Mevu Sothiyai - குளிர்ந்த திருவயிந்திரபுரத்திலே நித்யவாஸம் பண்ணுகிற பரஞ்சோதியான பெருமானைக்குறித்து வேல் வலவன் கலிகன்றி, Vel Valavan Kalikanri - வேல் பிடிக்கவல்ல திருமங்கை மன்னன் விரித்து உரைத்த, Virithu Uraitha - விரிவாக அருளிச்செய்த பாவு தன் தமிழ் இவை பத்து பாடிட, Paavu Than Tamil Ivai Paththu Paadida - அழகிய விஸ்தார கவியாக அமைந்த இப்பத்துப் பாசுரங்களையும் பாடியநுஸந்திக்குமளவில் பாவங்கள் பயிலா பாவங்கள் சேரமாட்டா. |