திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1162 | பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை) 5 | கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-5 | பதவுரை Show / Hideகோ மங்க, Ko Manga - க்ஷத்ரியர்கள் அழியவும் (- (தில்லை…சேர்மின்கள்-.)) வங்கம் கடல் வையம் உய்ய, Vankam Katal Vaiyam Uyya - மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளார் உஜ்ஜூவிக்கவும் குலமன்னர் அங்கம் மழுவில் துணிய, Kulamannar Angam Maluvil Thuniya - ராஜாக்களுடைய சரீரம் மழுவாலே துணிபடவும் தாம், Tham - தாமே அங்கு அமருள், Anku Amarul - அப்போதுண்டான போர்க்களத்திலே (புகுந்து) படை தொட்ட, Padai Thotta - ஆயுதத் தொழில் புரிந்த வென்றி தவம் மா முனியை, Vendri Thavam Maa Muniyai - ஜயசீலனாய்த தபஸ்வியான பரசுராமனாக அவதாரம் பண்ணின பெருமானை தமக்கு ஆக்க கிற்பீர், Thamakku Aakka Kirbeer - ஸ்வாதீனப்படுத்திக்கொள்ள நினைக்கு மன்பர்களே!, பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி, Poo Mangai Thangi Pulam Mangai Manni - பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும் புகழ் மங்கை எங்கும் திகழ, Pugazh Mangai Engum Thigazha - கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று புகழ் சேர் சேமம் கொள், Pugazh Ser Semam Kol - புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய் பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட |