திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1168 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள் எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன் என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே) 1 | வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே –3-3-1 | பதவுரை Show / Hideமருது இடை வாட போகி, Maruthu Idai Vaada Pogi - இரட்டை மருதமரங்களின் நடுவே அவை பக்கமடையும் படி தவழ்ந்து சென்றவனாயும், மல்லரை கொன்று, Mallarai Konru - மல்லர்ளைக் கொன்றவனாயும், ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து, Okkalithittu Aadal Nal Maa Udaittu - நடைபழகி ஆடிக்கொண்டு வந்த கொடிய (அசுரக்) குதிரையைக் கொன்றவனாயும், அன்று ஆயர்ஆநிரைக்கு இடர் தீர்ப்பான், Andru Aayaraanairaikku Idar Theerppaan - முன்பொரு காலத்தில் இடையர்கட்கும் பசுக்கூட்டங்கட்கும் நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக கூடிய மா மழை காத்த, Koodiya Maa Mazhai Kaatha - திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற கூந்தன் என, Koondhan Ena - கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக வருகின்றாள், Varugindraal - வருமவள் சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான, Sedu Uyarpo Pozhil Thillai Chithirakoodath Ullaana - இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான். |