திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1168 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1168பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள் எல்லாம் கூடி வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன் என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்-ஸ்ரீ தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே) 1
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே –3-3-1
பதவுரை Show / Hide
மருது இடை வாட போகி, Maruthu Idai Vaada Pogi - இரட்டை மருதமரங்களின் நடுவே அவை பக்கமடையும் படி தவழ்ந்து சென்றவனாயும்,
மல்லரை கொன்று, Mallarai Konru - மல்லர்ளைக் கொன்றவனாயும்,
ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து, Okkalithittu Aadal Nal Maa Udaittu - நடைபழகி ஆடிக்கொண்டு வந்த கொடிய (அசுரக்) குதிரையைக் கொன்றவனாயும்,
அன்று ஆயர்ஆநிரைக்கு இடர் தீர்ப்பான், Andru Aayaraanairaikku Idar Theerppaan - முன்பொரு காலத்தில் இடையர்கட்கும் பசுக்கூட்டங்கட்கும் நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக
கூடிய மா மழை காத்த, Koodiya Maa Mazhai Kaatha - திரண்ட பெருமழையைத் தடுத்து ரக்ஷித்தவனாயுமிருக்கிற
கூந்தன் என, Koondhan Ena - கூத்துக்களாடின கோபால க்ருஷ்ணனென்று சொல்லும்படியாக
வருகின்றாள், Varugindraal - வருமவள்
சேடு உயர்பூ பொழில் தில்லை சித்திரகூடத்த உள்ளான, Sedu Uyarpo Pozhil Thillai Chithirakoodath Ullaana - இளமை தங்கிய ஓங்கின பூஞ்சோலைகளையுடைய தில்லைத் திருச்சித்திர கூடத்திலுள்ளான்.