திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1173 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1173பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது-பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க தேவா விஷ்டமான மலை போலே ஸ்ரீ பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்) 6
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே –3-3-6
பதவுரை Show / Hide
எய்ய இலங்கை சிதைந்தது, Eyy Ilangai Sithaindhadhu - (அதுவுந் தவிர) “ஒரு அம்பை தொடுத்து விட்ட மாத்திரத்திலே லங்காபுரியானது அழிந்தொழிந்தது (- (சித்திரகூடத்து உள்ளான்-;))
ஆநிரை மலங்க வரும் மழை காப்பான், Aanirai Malanga Varum Mazhai Kaappaan - பசுக்களின் கூட்டம் துன்பமடையும்படியாக  வந்து ஏழுநாள் ஓயாமல் பெய்த மழையை தடுப்பதற்காகவும்
உய்ய, Uyya - (ஆநிரைகள்) பிழைப்பதற்காகவும்
பருவரை தாங்கி காத்தான், Paruvarai Thaangi Kaaththaan - பெரிய கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப் பிடித்து எல்லாரையும் காப்பாற்றினான்.
என்று வையத்து எவரும் ஏத்தி வணங்க, Endru Vaiyaththu Evarum Aethi Vananga - என்று சொல்லி பூமியிலுள்ளாரெல்லாரும் துதித்துத் தொழும் படியாக
அணங்கு எழுமா மலைபோலே தெய்வம் புள் ஏறி வருவான், Anangu Ezhumaa Malaipolae Deivam Pul Aeri Varuvaan - தெய்வாவேசங் கொண்ட ஒரு பெரிய மலைபோலே யிருக்கிற திவ்ய பக்ஷியாகியகருடன் மீதேறிக் கொண்டு எழுந்தருளும் பெருமான்