திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1174 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1174பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்சநீயங்களாய் காவிமலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள் கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ தில்லைச் சித்திர கூடத்துள்ளானே) 7
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே –3-3-7
பதவுரை Show / Hide
மா அஞ்சனம் மலைபோலே, Maa Anjanam Malaipolae - ” பெரிய கரிய மலை போன்றதும்
மேவு சினம், Mevu Sinam - மிகுதியாகக் கொண்ட கோபத்தையுடையதும்
முனிந்து இவை செய்வதறிவார் ஆவர், Muninthu Ivai Seivadharithaar Aavar - சீறியருளினது முதலிய இப்படிப்பட்ட  அருந்தொழில்களைச்  செய்வதறிவார்(இக்கண்ணபிரான் தவிர) வேறு யாருமில்லை ”( என்று சொல்லி )
அழகாய காவி மலர்நெடு கண்ணார் கைதொழ, Azhagaaya Kaavi Malarnedu Kannaar Kaithozh - அழகிய நீலோற்பலம் போன்ற நீண்ட கண்களையுடைய மாதர்கள் கைகூப்பித் தொழும்படியாக.
அடல், Adal - மிக்க வலிமையுடையதுமான
வேழம், Vezham - (குவலயாபீடமென்னும் கம்ஸனது) யானை
வீழ, Veel - மாண்டொழியும் படி
வீதி வருவான், Veethi Varuvaan - (வடமதுரைத்) தெருவிலே கம்பீரமாக எழுந்தருளினவன்
தேவர் வணங்கு, Thevar Vanangu - நித்யஸூரிகளும் வந்து வணங்கப்பெற்ற
தண், Than - அழகிய
தில்லை சித்திர கூடத்து உள்ளான், Thillai Chithira Koodathu Ullan - தில்லைத்திருச் சித்திரக்கூடத்தில் ஸேவை  ஸாதிக்கின்றான்