திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1177 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1177பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா) 10
தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே –3-3-10
பதவுரை Show / Hide
தேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த, Then Amar Poo Pozhil Thillai Chithirakoodam Amarntha - வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற
வானவர் தங்கள் பிரானை, Vaanavar Thangal Piraanai - தேவாதிதேவன் விஷயமாக,
மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
மருவார்ஊன் அமர்வேல், Maruvaroon Amarveel - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த)
ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும், On Tamil Ivai Onpathodu Ondrum - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும்
கற்று வல்லார்மேல், Kattru Vallarmeel - ஓதித் தேறினவர்களிடத்தில்
தீவினை சாரா, Theevinai Saara - பாவங்கள் கிட்டமாட்டா