திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1177 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான இப்பத்தும் அப்யசித்தவர்கள் பக்கலில் அவர்கள் பண்ணின பாபம் பல அனுபவத்துக்கு சாரா) 10 | தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே –3-3-10 | பதவுரை Show / Hideதேன் அமர் பூ பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த, Then Amar Poo Pozhil Thillai Chithirakoodam Amarntha - வண்டுகள் மொய்த்து அழகிய சோலைகளையுடைய தில்லைத்திருச் சித்திரகூடத்திலே நித்யவாஸஞ் செய்தருள்கிற வானவர் தங்கள் பிரானை, Vaanavar Thangal Piraanai - தேவாதிதேவன் விஷயமாக, மங்கையர்கோன், Mangaiyarkon - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும் மருவார்ஊன் அமர்வேல், Maruvaroon Amarveel - எதிரிகளின் சரிரத்திலே பொருந்தித் தைக்கும் வேற்படையையுடைய வருமான கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்(அருளிச் செய்த) ஒண் தமிழ் இவை ஒன்பதோடு ஒன்றும், On Tamil Ivai Onpathodu Ondrum - அழகிய தமிழினாலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லார்மேல், Kattru Vallarmeel - ஓதித் தேறினவர்களிடத்தில் தீவினை சாரா, Theevinai Saara - பாவங்கள் கிட்டமாட்டா |