திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1180 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1180பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (களை பறிப்பதாக அடுத்து வயலிலே இழிந்து கண்ணுக்கும் வாய்க்கும் அவற்றோடு உண்டான சர்வதா சாம்யத்தாலே களை பரியாதே போந்து ஏறுகிற ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 3
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு மையணைந்தகு வளைகள் தம் கண்கள் என்றும் மலர்க்குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் செய்யணைந்து களைகளை யாதேறும் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-3
பதவுரை Show / Hide
வை அணைந்த நுதி கோடு வராகம் ஒன்று ஆய், Vai Anaindha Nuthi Kodu Varagam Ondru Aayi - கூர்மை பொருந்திய முனையையுடைய கோரப் பற்களையுடைத்தான விலகூண் வராஹகூரூபியாகி
மண் எல்லாம் இடத்து எடுத்து மதங்கள் செய்து, Man Ellam Idathu Eduthu Mathangal Seidhu - பூமி முழுவதையும் அண்டபித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து (கோட்டு நுனியில்) ஏந்திக் கொண்டு வந்து  செருக்கு விளங்கும் வியாபாரங்களைச் செய்தவனாயும்,
வாணன் திண் நோள் நெய் அணைந்த திகிரியினால் நேர்ந்தவன், Vaanan Thin Nool Ney Aanaindha Thigiriyinaal Naerndhavan - பாணாஸீரனுடைய திடமான புஜங்களை கூர்மை பொருந்திய திருவாழியினால் அறுத்தவனாயுமுள்ள பெருமானுடைய
தாள்;, Thaal - திருவடிகளை
அணைகிற்பீர், Anaikirbeer - சேர விரும்பியிருக்கு மண்பர்களே
கடைசிமார்கள், Kadaisimaargal - பள்ளச்சிகள்
செய் அணைந்து, Sei Anaindhu - களை பறிப்பதாகக்  கழினியிலே இழிந்து,
நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும், Neithalodu Mai Anaindha Kuvalaihal Tham Kangkal Endrum - நெய்தல் மலரையும் கருமை நிறம் மிக்க குவளை மலரையும் தங்களுடைய கண்களாகவும்
குமுதம் மலர்தம் வாய் என்றும், Kumudham Malartham Vaai Endrum - சிவந்த ஆம்பல் மலரை தங்களுடைய வாயாகவும் ப்ரமித்து
களை களையாது ஏறும், Kalai Kalaiyadhu Aerum - களை பறியாமலே வெறுமனே கரையேறுமிடமான
காழி, Kaazhi - சேர்மின்