திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1182 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1182பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து இப்படி ஆஸ்ரித விரோதிகளை கை தொட்டு போக்குமவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர் ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே) 5
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் அவ்வாய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ்வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-5
பதவுரை Show / Hide
தெவ் ஆய மறம் மன்னர் குருதி கொண்டு, Thev Aaya Maram Mannar Kuruthi Konda - சத்துருக்களாகிய வீரராஜாக்களினுடைய ரத்தத்தாலே
திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்தி, Thirukkulathil Irandhorkku Thiruththi - தன் வம்சத்தில் மாண்டவர்களுக்குத் தர்ப்பணம் செய்து செய்த பரசுராமனாக அவதரித்தவனாயும்
வெம் வாய மா கீண்டு, Vem Vaaya Maa Keendu - கொடிய வாயையுடைய குதிரையாக வந்த வசுரனைக்  கிழித்தொழித் தவனாயும்
வேழம் அட்ட, Vezham Atta - கம்ஸனது யானையை முடித்தவனாயுமுள்ள
விண்ணவர்கோன், Vinnavarkon - தேவாதி தேவனுடைய திருவடிகளை தாள் அணைவீர் சேரவிரும்பு மன்பர்களே! குவளை விகிர்தம் மாதர் அவ்வாயலாள்
நெடுங் கண் காட்ட, Nedung Kan Kaata - கருநெய்தற் பூக்களானவை விலகூணைகளான ஸ்திரிகளுடைய அப்படிப்பட்ட அழகிய நீண்ட கண்கள்  போன்று விளங்கவும்
அரவிந்தம் முகம் காட்ட, Aravindham Mugam Kaata - தாமரை மலர்களானவை (அவர்களது முகம் போன்று விளங்கவும் )
அருகே ஆம்பல் செம் வாயின் திரள் காட்டும், Aruke Aampal Sem Vaayin Thiral Kaatum - அருகிலுள்ள செவ்வல்லி மலர்களானவை (அவர்களது  சிவந்த வாய்களின் கூட்டம் போன்று விளங்கவும் பெற்ற
வயல் சூழ், Vayal Soozh - கழனிகளால் சூழப்பட்ட நெல்