திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1184 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1184பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ருக்களால் சலிப்பிக்க அரிதான தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனைக் கிட்டி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்) 7
பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றுமறிந்தன போலப் புவி மேல் சிந்த செருவில் வலம்புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி யூடாடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே –3-4-7
பதவுரை Show / Hide
பொருவு இல் வலம்புரி அரக்கன் முடிகள் பத்தும் பத்தும் புற்று மறிந்தன போல புவிமேல சிந்த, Poruvu Il Valampuri Arakkan Mudigal Paththum Paththum Putttru Marindhana Pol Puvimel Sindha - ஒப்பற்ற வலிமையைக் கொண்டுள்ள இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாபோலே (எளிதாகக்) கீழே இற்று விழும்படியாக (- (பிறகு அங்கு நின்றும் ) ( பிறகு அங்கு நின்றும் ) (காழி …………..சேர்மின்))
செருவில் வலம்புரி சிலை கைமலை தோள்வேந்தன், Seruvil Valampuri Silai Kaimalai Tholvendhan - யுத்தத்தில் வலிமை காட்டுகிற வில்லை திருக்கையிலேயுடைய மலை போன்ற தோள்களையுடைய சக்ரவர்த்தி திருமகனது
திரு அடி சேர்ந்து உய்கிற்பீர், Thiru Adi Serndhu Uygirbeer - திருவடிகளையடைந்து வாழ விரும்புமன்பர்களே!
வலம்புரி, Valampuri - சங்குகளானவை
திரை எள்கி நீத்து மருவி, Thirai Elgi Neethu Maruvi - ஸமுத்ரத்தை இகழ்ந்து விட்டு நீங்கி (கடலில் நின்றும் வந்து ) (சீர்காழியிலே) வந்து சேர்ந்து
கைதை கழியூடு ஆடி, Kaithai Kazhiyoodu Aadi - தாழைகள் நிறைந்த கழயினுள்ளே திரிந்து
வயல் நண்ணி, Vayal Nanni - கழனிகளைச் சென்று சேர்ந்து
மழை தருநீர்தவழ் கால், Mazhai Tharuneerthavazh Kaal - மழைநீர்வெள்ளம் பெருகி வருகிற வாய்க்கால்கள் மூலமாக
தெருவில் மன்னி, Theruvil Manni - வீதிகளிலே வந்து சேர்ந்து
வலம்புரி தரளம் ஈனும், Valampuri Tharalam Eenum - சங்குகளையும் முத்துக்களையும்  (தெருக்களிலே) பிரஸவிக்கப்பெற்ற