திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1187 | பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாயந்தே தேவரைக் கவி பாட என்று துடங்கி தம்மைக் கவி பாடிக் கொண்டார் என்ன – அதுவும் நம்மை அன்றோ சொல்லிற்று என்று திரு உள்ளம் ஆனார் ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே எல்லார்க்கும் தாங்களே ஆஸ்ரயணீயராவார்) 10 | செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்குமலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முத்தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே –3-4-10 | பதவுரை Show / Hideசெங்கமலத்து அயன் அனைய மறையோர், Chengamalathu Ayan Anaiya Maraiyor - (திருநாபிக்) கமலத்திற் பிறந்த பிரமனையொத்த வைதிகரிகள் வாழ்கிற காழி சீராம விண்ணகரின், Kaazhi Seeraama Vinnagarin - காழிச் சீராம விண்ணகரத்திலுள்ள செங் கண் மாலை, Cheng Kan Maalai - செந்தாமரை போற் கண்ணனான பெருமான் விஷயமாக அம் கமலம் தடம் வயல் சூழ் ஆலி நாடன், Am Kamalam Thadam Vayal Soozh Aali Naadan - அழகிய தாமரைத்தடாகங்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருவாலி நாட்டுக்குத் தலைவரும் அருள் மாரி, Arul Maari - (பக்தர்கட்கு) அருளைப் பொழியும் மேகம் போன்றவரும் அரட்டு அமுக்கி, Arattu Amukki - தீங்கு செய்யுமவர்களைத் தலையெடுக்க வொட்டாதே அமுங்கச் செய்பவரும் அடையார்சீயம், Adaiyaarcheeyam - சத்ருக்களுக்கு ஸிம்ஹம் போன்றவரும் கொங்கு மலர்குழலியர்வேள், Kongu Malarkuzhaliyarveel - தேன்மிக்க பூக்களையணிந்த கூந்தலையுடைய மாதர்க்கு விரும்பத்தக்கவரும் மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்கு நிர்வாஹகரும் பரகாலன், Parakaalan - எதிரிகட்கு யமன் போன்றவரும் கொற்றம் வேல், Kotrama Veel - வெற்றி பொருந்தியவேற்படையை யுடையவருமான கலியன், Kaliyan - ஆழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த சங்கம் முகம் தமிழ் மாலை பத்தும் வல்லார்தாம், Sangam Mukam Tamil Maalai Pathum Vallaartaam - (புலவர்) கூட்டங்கூடிக் கொண்டாடத் தகுந்த தமிழ்ப் பாசுரங்களான இப்பத்தையும் ஓதவல்லவர்கள் தட கடல் சூழ் உலகுக்கு தலைவர், Thada Kadal Soozh Ulagukku Thalaivar - பரந்த கடலால் சூழப்பட்ட உலகத்திலுள்ளார்க்கெல்லாம் மேலாயிருக்கப் பெறுவர். |