திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1188 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1188பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எனக்கு தாரகனுமாய்-நிரதிசய போக்யனுமான நீ ஸ்ரீ திருவாலியை இருப்பிடமாக உடையையாய் வைத்து தனக்கு என ஓர் இடம் இல்லாதாரைப் போலே என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே – அந்யதா அஞ்ஞானமான தேசத்தை இருப்பிடமாக உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாயே) 1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும் செந்தழல் புரியும் திருவாலி யம்மானே –3-5-1
பதவுரை Show / Hide
அம் தளிர்அணி ஆர் அசோகின் இளதளிர்கள் அவை, Am Thalirani Aar Asokkin Ilathalirgal Avai - அழகிய தளிர்களாலுண்டான அழகு பொருந்திய அசோக மரத்தினது இளந்தளிர்களானவை
எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் பாளியிருப்பதனாலே
செம் தழல் புரையும், Sem Thazhal Puraiyum - சிவந்த அக்கி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற
திரு ஆலி அம்மானே, Thiru Aali Ammaane - திருவாலியில் எழுந்தருளியிருக்கும் பெருனானே!, எனக்குச் செல்ல மானவனே!
என் ஆர்உயிரே, En Aaruyire - எனது அருமையான உயிர்போன்றவனே!,
வந்து, Vandhu - நீயாகவே நிர்ஹேதுக் விஷயீகாரம்பண்ணி
உனது அடியேன் மனம் புகுந்தாய், Unathu Adiyean Manam Pugundhai - உன்னடியனான என்னுடைய மனத்திலே வந்து புகுந்தருளினாய்;
புகுந்ததற்பின், Pugundhatharpin - அப்படி நீ வந்து புகுந்த பின்பு
வணங்கும் என் சிந்தனைக்கு, Vanangum En Sindhanaikku - வணக்கமுற்ற என் மனத்துக்கு
இனியாய், Iniyai - போக்யனானாய்