திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1189 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1189பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று இவர் நெஞ்சிலே புகுருகைக்கு விலக்காமைக்கு அவசரம் பெரும் அளவும் யாயிற்று – விலக்காமை பெற்று – இவர் ஹிருதயத்தில் புகுந்த பின்பு க்ருத்யக்ருத்யனாய் இருந்தான் ஆயிற்று விபரீத ஜ்ஞானம் ஜனகமான தேசத்தை இருப்பிடமாக உடையையாய் இருந்து வைத்து என்னுடைய ஹிருதயத்தில் புகுந்து இருந்தாயே) 2
நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே –3-5-2
பதவுரை Show / Hide
சோலைத்தலை மாமயில் கணம் நடம் ஆட, Solai Thalai Maamayil Kanam Nadam Aada - சோலையிலே அழகிய மயில்களின் கூட்டமானது (களித்துக்) கூத்தாடும்படியாக (- (அணி ஆலி அம்மானே!-.))
ஆலை புகை மழைமுகில் போன்று எங்கும் எழுந்து கமழும், Aalai Pugai Mazhaimugil Ponderu Engum Ezhundhu Kamazhum - கருப்பஞ்சாறு அட்டபுகையானது காளமேகம்போலே எங்குங் கிளர்ந்து பரவி பரிமளிக்கப்பெற்ற
நீலம் தடவரை மாமணி நிகழ கிடந்தது போல், Neelam Thadavarai Maamani Nigazha Kidandhadhu Pol - நீலநிறமுள்ள பெரிய வொரு மலையானது (தன்மேல்) ஒரு நீலரத்னம் விளங்கப்பெற்றுப் படுத்திருப்பது போன்று
வேலைத்தலை அரவு அணை கிடந்தாய், Velaithalai Aravu Anai Kidandhai - திருப்பாற்கடலிலே சேஷசயனத்திலே (கௌஸ்துப மணி விளங்கப்) பள்ளி கொண்டிருந்தாய் முன்பு;
அடியேன் மனத்து இருந்தாய், Adiyean Manaththu Irundhai - (இப்போது) என்னுடைய மனத்திலே புகுந்து நீங்காதிருக்கின்றாய்