திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1191 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன் பக்கலிலே வந்து சதைகரூபமான உன் திருவடிகளிலே எனக்கு மறவாமை யாகிற பேறு உண்டாம்படியாக – நான் அபேஷிக்க அன்றிக்கே தண்ணீர் பந்தல் வைப்பாரோபாதி நிர்ஹேதுகமாக செய்து அருளினாய் – தர்ச நீயமான ஸ்ரீ திரு வாலியிலே நிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே) 4 | மின்னின் மன்னு நுடங்கிடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னு வயல் அணி யாலி யம்மானே –3-5-4 | பதவுரை Show / Hideபுன்னை செருந்தின்னு வண் பொழில் வாய், Punnai Serundhinnu Van Pozhil Vaai - புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்திருயிருக்கிற அழகிய சோலைகளிலே அகன் பனைகள் எங்கும், Akan Panaigal Engum - விசாலமான தடாகங்களிலெங்கும் அன்னம் கலந்து மன்னும், Annam Kalandu Mannum - அன்னப்பற்றவைகள் சேர்ந்து வாழப்பெற்றதாயும் வயல், Vayal - வயல்தளையடைத்தாயுமிருக்கிற அணி ஆலி அம்மானே, Ani Aali Ammane - அழகிய திருவாலிநகரிக்கு இறைவனே!; மின்னின் மன்னுநுடங்கு இடைமடவார்தம் சிந்தை மறந்து வந்து, Minnin Mannunudangu Idaimadavaartham Sindhai Marandhu Vandu - மின்னல் போன்று துவண்ட இடையையுடைய ஸ்த்ரிகளைப் பற்றின சிந்தனையை தவிர்ந்துவந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாய், Nin Mannu Sevadhikke Maravaamai Vaiththai - உன் இணைத்திருவடிகளையே நான் நித்தியம் அநுஸந்திக் கும்படி அருள்செய்து வைத்திருக்கிறாய்; ஆல், Aal - ஆச்சரியம்!. |