திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1192 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1192பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரிதர்க்கு விஸ்வாசத்தைப் பண்ணிக் கொடுக்குமவன் அன்றோ – எங்களுடைய நினைவு போலே தப்பிலும் தப்பி பலிக்கிலும் பலிக்கும் படி அன்று இறே உன் நினைவு இருக்கும் படி) 5
நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடலோசை யறா அணி யாலி யம்மானே –3-5-5
பதவுரை Show / Hide
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து, Paadal In Oli Sangin Osai Parandhu - (பகவத்விஷயப்) பாட்டுக்களின் மதுரமான தொனியும் சங்குகளின் முழக்கமும் எங்கும் வியாபித்திருக்கப் பெற்றதும்
பல் பணையால் மலி;ந்து, Pal Panaiyaal Malinthu - பலவகைப்பட்ட வாத்ய கோஷங்களாலும் நிறைந்திருக்கப் பெற்றதும்
எங்கும் ஆடல் அம்மானே, Engum Aadal Ammane - அழகிய திருவாலிநகரிக்கு ஸ்வாமியே!,
மரம் எய்த மா முனிவா, Maram Eytha Maa Munivaa - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) மராமரங்களேழின் மேலும் அம்புவிட்டுத் துளைத்த ஸத்யஸங்கல்பனே!,
நின் இணை அடி, Nin Inai Adi - உன் இணைத்திருவடிகளில்
பல் மலர்மாலை நீடு இட்டு, Pal Malarmalai Needu Ittu - பல வகைப்பட்ட புஷ்பமாலேகளை நெடுங்கலாம் ஸமர்ப்பித்து
தொழுது ஏத்தும் என் மனம் வாட, Thozhudhu Aeththum En Manam Vaada - ஸேவித்து துதிசெய்கின்ற அடியேனுடைய நெஞ்சு (உன்னைப்பிரிந்து)வாட்டமடையும் வகை
நீ நினையேல், Nee Ninaieyl - நீ நினைக்கலாகாது (என்னை விட்டு நீ பிரியலாகாது.)