திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1194 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1194பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னைப் பெறுக்கைக்கு ஒரு முதல் இல்லாதபடி இருக்கிற எனக்கு ஸூஹ்ருதமானவனே நீயே வந்து புகுந்த பின்பு உன்னை நான் இனி போகல் ஒட்டேன் ஸ்ரீ வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு-அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே) 7
உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப் புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே –3-5-7
பதவுரை Show / Hide
நிலவு மலர்புன்னை நாழல் நீழல், Nilavu Malarpunnai Naazhal Neezhal - (இவற்றினுடைய நிழலில்) எப்போதுமுள்ள புஷ்பங்களை யுடைய புன்னை மரங்களென்ன ஞாழல் மரங்களென்ன (- (ஸமயம் பார்த்திருந்து))
தண்தாமரை மலரின் மிசை, Thanthamarai Malarin Misai - குளிர்ந்த தாமரைப் பூவின் மேலே
மலி அலவன்கண் படுக்கும், Mali Alavankann Padukkum - பெரிய ஆண் நண்டுகள் பள்ளி கொண்டிருக்கப் பெற்ற
திரை உலவு கடல், Thirai Ulavu Kadal - திரைக் கிளப்பத்தையுடைய திருப்பாற்கடலில்
பள்ளிகொண்டு, Pallikondru - சயனித்திருந்து
வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப்புலவ, Vandhu Un Adiyen Manam Pugundha Appulava - அங்கு நின்றும் ஒடிவந்து உனது தாஸனான என்னுடைய மனத்திலே புகுந்த அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞனே!
புண்ணியனே, Punniyaney - எனது பாக்கியம் வடிவெடுத்துள்ளவனே!
புகுந்தாயை போகல் ஒட்டேன், Pugundhaayi Pogaal Otten - என்னிடம் வந்து சேர்ந்தவுன்னை இனி வேறிடம் போகவொட்டேன்