திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1195 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1195பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினாய் அங்கு நின்றும் ஆஸ்ரிதனுக்காக ஸ்ரீ திருக் கடல் மல்லையிலே கண் வளர்ந்து அருளினாய் இவ்வோ இடங்கள் உனக்கு வாசஸ்தானமாய இருக்க என் பக்கல் கிருபை பண்ணி வந்து புகுந்தாய்) 8
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ கொங்கு செண்பக மல்லிகை மலர் புல்கி இன்னிள வண்டு போய் இளம் தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே –3-5-8
பதவுரை Show / Hide
இன் இளவண்டு, In Ilavandu - இனிய இள வண்டுகளானவை (- (அவை கொதித்தபடியாலே) (திரு ஆலி அம்மானே!- ;))
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்புல்கி, Kongu Senbagam Malligai Malarpulki - மணம் மிக்க செண்பகப்பூவையும் தழுவிப்பார்த்து
போய், Poy - அவற்றைவிட்டுப்போய்
இளதெங்கின் நாது அளையும், Ilathengin Naathu Alaiyum - இளைய தென்னை மரங்களின் பாளைகளிலே அளையப்பெற்ற
சங்கு தங்கு தட,கடல் கடல் மல்லையுள் கிடந்தாய், Sangu Thangu Thada Kadal Kadal Mallaiyul Kidandhai - சங்குகள் தங்கிய பெரிய திருப்பாற்கடலிலும் திருக்கடன் மல்லையிலும் (முன்பு) பள்ளி கொண்டிருந்தாய்;
இங்கு அருள் புரிந்து என்னுள் புகுந்தாய், Ingu Arul Purindhu Ennul Pugundhai - இப்போது கருணைகூர்ந்து என்னெஞ்சிலே பிரவேசித்தாய்;
இனி போயினால் அறையோ, Ini Poyinaal Arayyo - இனி நீயே விட்டுப்போக நினைத்தாயாகில் அறையோவறை