திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1196 | பெரிய திருமொழி || (3-5–வந்து) (திருவாலி 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை வன்னியமறுத்து ஆளுகிறவனே எனக்கு ஸ்வாமி ஆனவனே மாஸூச -என்று நான் உஜ்ஜீவிக்கும்படி ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்) 9 | ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே –3-5-9 | பதவுரை Show / Hideநீதி ஆகிய வேதம், Neethi Aagiya Vedham - (காட்டார் அநுஷ்டிக்க வேண்டு மவற்றை) விதிக்குமவையான வேதங்களையும் (- (அணி ஆலி அம்மானே!–;)) மாமுனியாளர் தோற்றம், Maa Muniyalar Thotram - (அந்த வேதங்களிலுள்ள மந்திரங்களை தர்சநம் பண்ணினவர்களான) மஹர்ஷிகளின் வரலாற்றையும் உரைத்து, Uraithu - வெளியிட்டவனாயும் மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய், Mattravarkku Aadhi Aay Irundhai - மற்றுமுள்ள எல்லார்க்கும் காரணபூதனாயு மிருக்குமவனே! வேதியா, Vedhiya - வேதமொன்றினாலேயே அறியத்தக்கவனே! அரையா, Araiyaa - தேவாதி தேவனே! எந்தாய், Endhai - எமக்கு ஸ்வாமியானவனே! ஆயிரம் நாமமும் ஓதி, Aayiram Naamamum Othi - (உனது) ஸஹஸ்ர நாமங்களேயுஞ் சொல்லி; பணிந்து ஏத்தி, Panindhu Aethi - வணங்கித் துதித்து நின் அடைந்தேற்கு, Nin Adaindhaerku - உன்னைத் தஞ்சமாகப்பற்றி புள்ள எனக்கு ஒரு பொருள் ஒரு மாற்றம் உரையாய், Oru Porul Oru Maatram Uraiyaai - ஒரு அர்த்தத்தையாவது ஒரு சொல்லையாவது அருளிச் செய்யவேணும். |