திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1198 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் – உனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது-எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே எனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அறுவியாயோ- என்கிறாள்) 1 | தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே –3-6-1 | பதவுரை Show / Hideதூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே, Thoo Virya Malaruazhakki Thunaiyodum Piriyadhe - சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து பூ விரிய மது நுகரும், Poo Virya Madhu Nukarum - பூக்கள் விகஸிக்க, அவற்றிலுள்ள தேனைப் பானம் பண்ணுகிற பொறி வாயி சிறுவண்டே, Pori Vaayi Siruvandhe - புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி, Valarkkum Pugazh Aalar Thiru Aavi - குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற ஏ வரிவெம் சிலேயானுக்கு, Ea Varivem Sileyaanukku - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு என் நிலைமை உரையாய், En Nilaimai Uraiyaai - என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக. |