Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 12 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
12திருப்பல்லாண்டு || 12
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே
பல்லாண்டு என்று, Pallandu Endru - நித்யமாய் மங்கள முண்டாகவேண்டும் என்று
பவித்திரனை, Pavithiranai - (இயற்கையாகவே) பரிசுத்தனாய்
பரமேட்டியை, Paramettiyai - மேலான ஸ்தானமான வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனாய்
சார்ங்கம் என்னும், Saarngam Ennum - சார்ங்கமென்று திருநாமத்தை உடைய
வில், Vil - வில்லை
ஆண்டான் தன்னை, Aandaan Thannai - ஆளும் எம்பெருமானைக் குறித்து
வில்லிபுத்தூர், Villiputhoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
விட்டுசித்தன், Vittu Chithan - விஷ்ணுசித்தன் என்ற திருநாமத்தையுடைய பெரியாழ்வார்
விரும்பிய, Virumbiya - விருப்பத்துடன் அருளிச்செய்த
சொல், Sol - ஸ்ரீஸூக்தியை
நல் ஆண்டு என்று, Nal Aandu Endru - (பல்லாண்டு பாடத்தக்க) நல்ல காலம் (நேர்படுவதே!) என்று
நவின்று உரைப்பார், Navinru Uraippar - இடைவிடாமல் சொல்லுமவர்கள்
நமோ நாராயணாய், Namo Narayanaaya - திருமந்திரத்தை அனுஸந்தித்து
பல்லாண்டும், Pallandum - கணக்கற்ற காலங்கள்
பரமாத்மனை, Paramaathmanai - பரமாத்மா நாராயணனை
சூழ்ந்து இருந்து, Soozhnthu Irundhu - சுற்றிலும் இருந்து
ஏத்துவர் பல்லாண்டே, Ethuvar Pallande - பல்லாண்டு பாடுவார்கள்