திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1202 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்தலை இத்தலையாய்-தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க – தான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று சொல்லுங்கோள் என்று தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் – ஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் – தூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்க்ச் செய்தே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு அங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே-ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே) 5 | வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே ! –3-6-5 | பதவுரை Show / Hideஓ மண் அளந்த தாளாளா, O Mann Alandha Thaalala - பூமியை யளந்துகொண்ட திருவடிகளை யுடையவனே! ஓ தண் குடந்தை நகரி ஆளா, O Than Kudandhai Nagari Aalaa - குளிர்ந்த திருக்குடந்தையை ஆளுமவனே! ஓ வரை எடுத்த தோன் ஆனா, O Varai Edutha Thon Aanaa - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்த திருத்தோள்களே யுடையவனே! வாள் ஆய கண் பனிப்ப, Vaal Aaya Kan Panippa - வாள்போன்ற (எனது) கண்கள் நீரைப்பெருக்கவும் மெல் முலைகள் பொன் அரும்ப, Mel Muligal Pon Arumba - மெல்லிய முலைகளில் நிற வேறுபாடு தோன்றவும் நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு என்தனத்கு, Naal Naalum Nin Ninaindhu Naiveyarku Enthanathkku - நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு மனம் தளர்கின்ற எனக்கு ஓர்துணையாளன் ஆகாய், Oorthunaiyalan Aagaai - நீ சிறந்த துணைவனாக வேணும் |