திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1204 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1204பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே- அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி) 7
கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல் பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா ! வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என் கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ! –3-6-7
பதவுரை Show / Hide
பண்டு அரவம் திரை உலவு குரை கடல்மேல், Pandhu Aravam Thirai Ulavu Kurai Kadalmel - முற்காலத்தில் பெரிய கோஷத்தையுடைய அலைகள் உலாவுகின்ற பரந்த திருப்பாற்கடலிலே
கொண்டு, Kondhu - திருவுள்ளங்கொண்டு
அரவு இன் அணை, Aravu In Anai - ஆதிசேஷனாகிற இனிய படுக்கையிலே
குலம் வரை போல், Kulam Varai Pol - சிறந்த மலைபோலே
கிடந்து, Kidandhu - பள்ளிகொண்டவனாயும்
பார்அளந்த, Paaralanda - (திரிவிக்கிரமனாய்) பூமியை அளந்தவனாயுமுள்ள
பண்பு ஆளா, Panbu Aalaa - தயாளுவானவனே!
வண்டு அமரும் வளர் பொழில் சூழ், Vandu Amarum Valar Pozhil Soozh - வண்டுகள் படித்து ஓங்கின சோலைகளால் சூழப்பட்ட
வயல், Vayal - கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியி லெழுந்தருளியிருக்கிற
மைந்தா, Maindha - நித்ய யௌவனசாலியான பெருமானே;
என் கண் துயில், En Kan Thuyil - எனது கண்ணுறக்கத்தை
நீ கொண்டாய்க்கு, Nee Kondaaykku - போக்கடித்த உனக்கு
என் கனம் வளையும், En Kanam Valaiyum - எனது பொன்வளைகளையும்
கடவேனோ, Kadaveno - இழக்கக்கடவேனோ?