திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1205 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு- உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் – இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது) 8 | குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே ! –3-6-8 | பதவுரை Show / Hideகுயில் ஆலும் வளர் பொழில் சூழ்தண் குடந்தை, Kuyil Aalum Valar Pozhil Soozhthaan Kudandhai - குயில்கள் (களித்துத்) கூடத்தாடுமிடமான வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே எழுந்தருளியிருக்கிற (- (வயலாலி மணவாளா!-;)) குடம் ஆடீ, Kudam Aadi - குடக் கூத்தாடின பெருமானே! துயிலாத கண் இணையேன், Thuyilaadha Kan Inaiyen - உறக்கங் கொள்ளாத கண்களே யுடைய அடியேன் நின் நினைந்து, Nin Ninaindhu - உன்னையே சிந்தித்துக் கொண்டு துயர்வேனோ, Thuyarveno - துக்கித்துக் கிடப்பேனோ! முயல் ஆலும் இள மதிக்கே, Muyal Aalum Ila Mathikke - (தன்னிடையிலே)முயல் துள்ளிவிளையாடப் பெற்ற பாலச்சந்திரனுக்கே வளை இழந்தேற்கு, Valai Izhandheirkku - வளைகளை இழந்தவளான என்னிடத்தினின்றும் இது நடுவே, Idhu Naduve - இத்தனை துக்கங்களினிடையே மணி நிறமே கொள்வாயோ, Mani Nirame Kolvaayo - அழகிய மேனிநிறத்தையும் கொள்ளை கொள்வாயோ? |