திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1207 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1207பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும் தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை – அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று – சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா – இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று) 10
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே –3-6-10
பதவுரை Show / Hide
கை இலக்கு வேல் கலியன், Kai Ilakku Vel Kalyan - கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார்,
மை இலங்கு கரு குவளை, Mai Ilangu Karu Kuvalai - மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள்
மருங்கு அலரும் வயல், Marungu Alarum Vayal - ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே இருக்கிற
நெய் இலங்கு சுடர் ஆழி, Ney Ilangu Sudar Aazhi - நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான
படையானை, Padaiyaanai - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள
நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்வரனை
கண்டு உரைத்த, Kandu Uraitha - ஸேவித்துக் சொன்ன
தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்த் தொடைகளான
இவை ஐ இரண்டும், Ivai Ai Irandum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
அரு வினைகள், Aru Vinaigal - துஷ்கருமங்கள்
அடையா, Adaiyaa - சேரமாட்டா.