திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1209 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி- கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு -அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து-திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ) 2 | பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ? –3-7-2 | பதவுரை Show / Hideநங்காய், Nangai - பெண்ணே!, (- (அயல் வீட்டுப் பெண்களில் ஒருத்தியை நோக்கி சொல்லுகிறாள்) (அப்படிப்பட்டவிவன் இப்போது) (தம்பதிகளாய்ச் சேர்ந்துகொண்ட அவ்விருவரும்)) இவன், Ivan - என் மகளைக்கொண்டுபோன விவன் பண்டு, Pandhu - முன்பெல்லாம் படிறன், Padiran - (பெண்களைத் திருடுவது முதலான) தீம்புகளைச் செய்கிற ஆயன், Aayaan - இடையனாயிருந்தவன் புகுந்து, Pugunthu - (என் வீட்டிலே ப்ரத்யக்ஷமாக) வந்து நுழைந்து என் மகள்தன், En Magalthan - என் பெண்ணினுடைய அம் செம்தொண்டை கனி வாய், Am Semthondai Kani Vaai - அழகிய சிவந்த ஆதொண்டைப் பழம் போன்ற அதரத்தை நுகர்ந்தானை, Nugarnthaanai - (பானம் பண்ணினான்) அப்படி பானம்பண்ணின இவனை உகந்து, Uganthu - (என் பெண்) விரும்பி கொண்டை ஒரு கண் மிளிர, Kondai Oru Kan Milira - கொண்டைமீன் போலே அழகிய கண்கள் ஒளிவிட கிளி போல் மிழற்றி, Kili Pol Mizhatri - கிளிபோலே மழலைச் சொற்கள் பேசிக்கொண்டு அவன் பின் நடந்து, Avan Pin Nadandhu - அவன் பின்னே நடந்துபோய் வண்டு அமர், Vandu Amar - வண்டுகள்படிந்த கானல்மல்கும், Kaanalmalgum - கடற்கரைச் சோலை சூழ்ந்த வயல், Vayal - கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Kollo - சென்று சேருவர்களோ? |