திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1211 | பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்-இடையனை பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்-எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை – மாதவன் தன் துணையா நடந்தாள்-ஆழம் காலை மிதப் பெற்று புத்தி பண்ணினாள் அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்-தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்) 4 | ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ? –3-7-4 | பதவுரை Show / Hideஅவன், Avan - (என்மகளைக் கொண்டு போன) அவனுடைய (- (என்மகளோ வென்னில்) (சென்ற இருவரும்)) தொல் பிறப்பு, Thol Pirappu - பழைய ஜன்மம் ஏது, Aethu - க்ஷத்ரிய ஜன்மமோ? இடைச்சன்மமோ? யாது கொல்? அறியேன், Ariyen - நானறிகின்றிலேன்; இளையவன், Ilaiyavan - குமரனாயும் வளை ஊதி, Valai Oothi - சங்கை ஊதுமவனாயும் மன்னர் தாதுவனாயவன், Mannar Thadhuvanayavan - பாண்டவர்களுக்காகத் தாதுசென்றவனாயுள்ள அவனுடைய ஊர், Oor - ஊரையும் அறியேன், Ariyen - அறிகின்றிலேன்; சொல்லுவீர், Solluveer - சொல்லத் தெரிந்தவர்களே! சொல்லீர், Sollir - சொல்லுங்கள்; மாதவன் தன் துணை ஆ, Madhavan Than Thunai Aa - திருமால் தனக்குத் துணையாகப் பெற்று நடந்தாள், Nadandhaal - (அவனோடு கூடச்) சென்றாள்; தடம் சூழ் புறவின், Thadam Soozh Puravin - தடாகங்கள் சூழ்ந்த சோலைகளை யுடையதும் போது, Podhu - பூக்களிலே வண்டு ஆடு, Vandu Aadu - வண்டுகள் களித்துக் கூத்தாடப் பெற்ற செம்மல், Semmal - பெருமைதங்கிய புனல், Punal - தீர்த்தங்களையுடையதுமான ஆலி, Aali - திருவாலியிலே புகுவர் கொலோ, Pughuvar Koloo - சென்று சேருவர்களோ? |