திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1214 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1214பெரிய திருமொழி || (3-7–கள்வன் கொல்) (திருவாலி 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இங்கே இருவரைக் கை விட்டால்-அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே) 7
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ? –3-7-7
பதவுரை Show / Hide
மின்மையும், Minmaiyum - மின்னற் கொடியையும் (- (அவ்விருவரும்) (புகுவர் கொலோ சென்று சேருவர்களோ?))
வஞ்சியையும், Vanjiyaiyum - வஞ்சிக் கொடியையும்
வென்று, Vendru - தோற்கடித்து
இலங்கும், Ilankum - (மிகவும் ஸூக்ஷ்மமாக)விளங்காநின்ற
இடையாள், Idaiyal - இடையை யுடையளான என் மகள்,
அன்னையும் அத்தனும் என்று, Annaiyum Aththanum Endru - தாய் தகப்பனென்று கூட
அடியோமுக்கு, Adiyomukku - எங்கள் விஷயத்தில்
இரங்கிற்றிலள், Irangittrilal - தயை பண்ணினாளில்லை;
பின்னை தன் காதலன் தன், Pinnai Than Kaadhalan Than - திருமாலினது
பெரு தோள் நலம் பேணினள், Peru Thol Nalam Peeninal - பெருமை தங்கிய தோள்களோடே அணைந்துபெறும் ஸுகத்தையே விரும்பின வளாய்
நடந்து, Nadandhu - (அவனோடு கூட) நடந்து செல்ல,
புன்னையும் அன்னமும் சூழ், Punnaiyum Annanum Soozh - புன்னைப் பொழிலும் அன்னப் பறவைகளும் சூழ்ந்த
புனல், Punal - நீர்வளம் பொருந்திய
ஆலி, Aali - திருவாலியிலே